நம்பிக்கை
நம்பிக்கை!!!
//////////////////
நம்பிக்கை விதைகளை
மனவயல் எங்கும்
ஊன்றி வையுங்கள் !
வாய்ப்புத் தூரலில்
மெல்ல வளரந்திடும் !
பெருமழை வெற்றிகளில்
விருட்சங்களாய்ப் பேருரு எடுத்து
வானத்திற்கு அப்பாலும்
வசந்தம் வீசிடும் !
அவ்வப்போது முளைத்திடும்
அச்சம் தயக்கம் முயலாமை
எனும் அனைத்துக் களைகளையும்
கூடாநட்பு
எனும் ஒட்டுண்ணிகளையும்
அடியோடு களைந்திடுங்கள்!
மகிழ்ச்சித் தென்றல்
வாழ்க்கை வனங்களில்
எப்போதும் வீசிடும் !!
-யாதுமறியான்.