வெள்ளப் பெருக்கு

வெள்ளப் பெருக்கு
××××××××××××××××××
ஊரணிக் கட்டிடமாகி
ஊராகிட - வெள்ளம்
நரபலியாக மனிதனை
நளபாகமாக உண்ணுமே

விவசாய நிலம்
வெடித்த வேளை
அவசியம் இருந்தும்
அடமழைப் பொழியாதே

விளை நிலம்
விளைந்து நிற்க
அவசிமற்ற மழை
அழித்திடும் பயிர்களே

கண்ணீர் மல்கிடக்
கனமழை பொழியாதுள
தண்ணீர் வெள்ளமாகத்
தாகம் தீர்க்காதே

மழை பொழிய
மண்ணை நம்பிடும்
ஏழை உழவன்
ஏற்றம் பெருவானே

" யாதும் ஊரே யாவரும் கேளிர் "
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (26-Jul-23, 2:36 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : vellap pourkku
பார்வை : 38

மேலே