வறுமைக்கு விடிவுண்டு
வறுமைக்கு விடிவுண்டு
////////////////\\\
மழைகண்ட விதையும்
மலர்ந்தே தளிர்விடும்
ஏழையென்ற நிலைமாற
ஏக்கங்களை உரமாக்கு
மலர்தேடிச் சேகரிக்கும்
ஒருதுளி உருகொண்ட
தேனீயும் கைப்பிடித்
தேனை சேமிப்பதாக
திரைகடல் கடந்தும்
திரவியம் தேடிட
திருப்பமும் வருமே
திருப்பதி தெய்வமாக
அணைநீரும் வாய்க்கால்
வந்திடவே பயணாகும்
சேர்த்தப் பணமும்
சேவையாலே பலனாகும்
உழைத்திட ஊக்கம்கொள்
வெறுமைகள் நிறைவாகும்
உதவிட மனம்கொள்
வறுமையும் முடிவாகும்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்