மாவீரன் அலெக்சாண்டர்

மாவீரன் அலெக்சாண்டர்
×××××××××××××××××××××××
அடங்காக் குதிரையை
அடக்கினான் நிழலாலே
தடங்கள் படைத்தான்
தன்நிகராப் போரினாலே

பொன் பொருளென
படையால் கவர்ந்தான்
வென்றான் உலகை
வெற்றியால் உயர்ந்தான்

அடைந்தான் கடலளவு
அமிழ்து வெறுங்கையென
உடைமைகளைத் துறக்க
உணர்ந்தான் உண்மையை

அறத்தை உணர்த்தினான்
கரமதை உயர்த்தியே
இறந்தான் உடலால்
வாழ்கிறான் வரலாற்றிலே

#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (29-Jul-23, 5:57 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 70

மேலே