மனிதன் இறைவன்
#மனிதன்.. #இறைவன்.
××××××××××××××××××××××
மனிதன் வாழ்ந்திட
மண்ணும் வானும்
இனிதன மாசற்று
இருத்தல் வேண்டுமே
புகையால் நெகிழியால்
புண்படுத்த வாழ்வோர்க்குப்
பகையாகிச் சீற்றத்தால்
பாடையில் ஏற்றுதே
வனத்தை வீடாக்கி
வாழ்ந்திட நினைப்போரை
பிணமாக்கி மரத்திற்கு
உரமாக்குகிறான் இறைவன்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்