ஆனந்த யாழை மீட்டுகிறாய்
ஆனந்த யாழை மீட்டுகிறாய் !!
$$$$$$$$$$$$$$
நாணத்தில் விரல்கள்
கோலமிடக் கொஞ்சும் /
பாணனின் பாடல்கள்
பாடுகிறாய் ஆடுகிறாய் /
வான்மழைப் போலவே
கொட்டுகிறாய் அன்பை /
தேன்சுவைக் கலந்தே
ஊற்றுகிறாய்த் தேற்றுகிறாய் /
ஆனந்த யாழினை
மீட்டுகிறாய் என்னில் /
ஏனிந்த பூரிப்பை
ஊட்டுகிறாய் வாட்டுகிறாய் !!
-யாதுமறியான்.