விழிநீலமே நீ விமர்சிக்க வந்தாயோ
பொழுது விடிகையில் புதுமலர் இதழ்விரிக்கும்
எழுதுகோல் தென்றல் இதழில் கவியெழுதும்
எழும்இளம் கதிரதை திருப்பிப் பார்க்கும்
விழிநீல மேநீ விமர்சிக்க வந்தாயோ
பொழுதுபுல ரும்போதில் புதுமலர் இதழ்விரிக்கும்
எழுதுகோல்மென் தென்றல்பூ ஏட்டினில் கவியெழுதும்
எழும்இளம்பொற் கதிர்கவிதை எழுத்தினை படித்திடுமே
விழிநீல மேநீயும் வந்தனை விமர்சிக்க
----பல வாய்ப்பாட்டிலும்
காய் காய் விளம் காய் எனும் ஒரே வாய்ப்பாட்டிலும்
அமைந்து மூன்றாம் சீர் மோனை அழகுடன்
பொலிந்திடும் பொதிகைத்தமிழ் தென்றல் கவிதை