கிறிஸ்துமஸ் நாள்

கிறிஸ்துமஸ் நாள்

மாலை நேரத்தில் வானில் உதித்தது ஒரு நட்சத்திரம்
மாட்டுக்கொட்டிலில் அவதரித்தது ஒரு சிரித்த மகவு
மாதா மேரியை கருணையுள்ள அம்மாவாக்கியது
மாசற்ற கண்களுடன் இனிமையாக பேசிக்கொண்டு
மானிடர்க்கு வழிகாட்டிடும் மகானாக உருமாறியது
மார்பை நிமிர்த்தி பலரை அடிமையாக நடத்தியவரை
மாநிலத்தோர் பார்த்து நகைக்கும் வண்ணம் செய்திட
மதியோடு அவரை அவணியாவும் நோக்கும் வண்ணம்
அனைவருக்கும் இறைவனின் அறக் கட்டளைகளை காட்டி
குவலயத்தோரை உய்வித்த மகத்தான மனித மாணிக்கம்
பிறந்த இந்நன்னாள் வையம் புகழும் கிறிஸ்துமஸ் என்று
உலகெங்கும் புத்தாடை அணிந்து கொண்டாடிடுதே

எழுதியவர் : கே என் ராம் (24-Dec-23, 9:27 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 44

மேலே