கல்லாத்து உலகளவு
கல்லாதது உலகளவு /
———
கல்வியெனும் கடலினுக்கு
கரையென்று ஏதுமுண்டோ /
வல்லவரோ நல்லவரோ
வகுப்பினிலே சிறியவரே /
பால்வெளியாய்ப் பலதுறைகள்
படிப்பதுவோ சிலவகைகள் /
நூல்பலவும் பள்ளிகளும்
நுண்ணறிவெலாம் கொடுத்திடுமோ /
கசடறவே கற்பதுவும்
கற்பனைதான் மறுப்பேது /
பசிபோக்கும் பாடங்களைப்
படித்திடுதல் சிறப்பன்றோ /
ஔவையவள் மொழியினையே
ஒதுக்கிடுதல் இயன்றிடுமோ /
பௌவமாய்ப் பரந்திருக்கும்
படித்தலுக்கு எல்லையேது /
நம்மைநாமே பகுத்தறிவோம்
நமக்கான துறையினிலே /
செம்மையாகப் பயின்றிடுவோம்
சீருடனே திகழ்ந்திடுவோம் !!
-யாதுமறியான்.