தேனருந்தும் வண்டேநீ தேடிடும் பூஇவளோ
வானமே நீதேடும் வெண்ணிலா பூமியிலே
தேனருந்தும் வண்டேநீ தேடிடும் பூஇவளோ
கான அமுதைப் பொழிந்திடும் பூங்குயிலே
தேனிசை யால்இவளைப் பாடு
----ஒருவிகற்ப இன்னிசை வெண்பா முன்றாம் சீர்
மோனைப் பொலிவுடன்
-----------------------------------------------------------------------------------------------------
வானமேநீ தேடுகின்ற வெண்ணிலாபார் பூமியிலே
தேனருந்தும் வண்டேநீ தேடுகின்ற பூஇவளோ
கானத்தேன் சுவையமுதைப் பொழிகின்ற பூங்குயிலே
தேனிசைதன் னால்இவளைப் பாடிடுவாய் நான்ரசிப்பேன்
-----காய் காய் காய் காய் கலிவிருத்தம் மோனை அழகுடன்
------------------------------------------------------------------------------------------------
வானமேநீ தேடுகின்ற வளர்நிலாப்பார் பூமியிலே
தேனருந்தும் இனியவண்டே தேடுகின்ற மலரிவாளோ
கானத்தேன் சுவையமுதைப் பொழிகின்ற இளங்குயிலே
தேனிசைதன் னால்இவளைப் பாடிடுவாய் ரசிப்பேன்நான்
----காய் முன் நிரை நிற்கும் கலித்தளை மிகுந்து
தரவு கொச்சகக் கலிப்பா ஆனது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
