கண்கள் தொடுக்கும் காதல் பாகம் -21

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் -21

"பெற்றோர், படிப்பு ,உறவு இவற்றை எல்லாம் புறந்தள்ளும் கருவியல்ல காதல் , உண்மையான காதல் உறவுகளை இணைப்பதுதான் , பிரிப்பது மோகத்தின் விளைவு " எப்படியாவது திரிஷாவுக்கு புரிய வைத்து அவளை வீட்டுக்கு அனுப்புங்கள் என்றான் கெளதம் குமுதாவிடம்..

"பூமியில் வாழ்வதற்கு ஆயிரம் வழிகள், இறப்பதற்கு இரண்டாயிரம் வழிகள் இருக்கு"நாளை காலை 11.30 மணி வரை உன்னை எதிர் பார்ப்பேன், வரவில்லையெனில் உயிர் துறப்பேன் என்று குமுதாவிடமிருந்து போனை பறித்து கெளதமை மிரட்டினாள் திரிஷா..

"காதல் வந்தால் ஏற்றுக் கொண்டவர்கள் , காதலுக்கு எதிரே என்ன நடந்தாலும் எதிர்த்து நிற்க தயார் படுத்திக் கொள்ள வேண்டும் " தற்கொலை முயற்சி தீர்வாகாது என்றான் கெளதம்..

"காதலைத் தூண்டியது நீ.. காதல் வயப்பட்டது நான் ","சொல்லாத காதல் செய்தது நீ,காதலை புரமோஷன் செய்து காதலித்தது நான்" ,காதலுக்காக என்னை சுற்றி சுற்றி வந்தது நீ,உன் கரம் பிடித்து காதலில் வெற்றியடைய உன்னை சுற்றி சுற்றி வருபவள் நான் "இன்று எதற்கும் துணிந்தவளாக நான்.. படபடவென சொல்லி முடித்தாள் திரிஷா..

"காதலில் அவசரம், வாழ்வின் நவரசமும் கெடும்"பொறுமையாக இரு "தற்கொலை எண்ணத்தை கைவிடு ,மற்றவை தானாக நடக்கும்" என்றான் கெளதம்..

எது தற்கொலை?,"காதலெனும் தேனை திகட்ட திகட்ட ஊட்டி , காதல் மறுதலிப்பு எனும் நஞ்சை ஊட்டி " கொலை செய்யும் கொலைகாரன் நீ..உன்னை நம்பினேன் இப்ப வெம்பி நிற்கிறேன் என்றவள் தேம்பி தேம்பி அழுதாள் திரிஷா..

அழாதே, ஊர்க்கு வாரேன்.. பொறுமையாக இரு என்று சமதானப் படுத்திய பின் போன் இணைப்பை துண்டித்தான் கெளதம்..

கெளதம் கடை முதலாளியிடம் அவசரமாக ஊர்க்கு போகனும் ஒரு இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் சார் என்றான்.

தம்பி..மாதத்தில் முதல் வாரம் இது நல்லா விற்பனையாகும் நேரம், இப்போது லீவு கேட்டா எப்படி?, என்றார் முதலாளி..

புரியுது சார் !, அக்காவுக்கு பேர்கால வலி அதுவும் 8 ஆவது மாதத்திலே குறை பிரசவ வலி வந்த நிலையில் மருத்துவமனையில் சேர்த்து இருக்காங்க .. என்று இழுத்தான் கெளதம்

அம்மா அப்பா, மாப்பிள்ளை உறவு எல்லாம் இருப்பாங்களே , அவங்க பார்த்துக் கொள்வார்கள் ,நீ வேலையை பார் என்றார் முதலாளி ..

அம்மா படிக்காதவங்க அவங்களுக்கு எதுவும் தெரியாது, அப்பா கால் முறிவு அறுவை சிகிச்சை செய்து நடக்க முடியாத நிலையில் இருக்காங்க.. நான்தான் பார்த்து ஆகனும்.. சொல்லி கொண்டே பம்மினான்.. கெளதம்

என்னப்பா நீ ..சரி போயிட்டு வா என்றார் முதலாளி..

சார்.. சம்பளம்.. என்று சினுங்கியபடி கேட்டான் கெளதம்.

இந்த செலவுக்கு வச்சுக்கோ என்று இரண்டு ஐநூறு தாள்களை நீட்டினார். சம்பளம் ஊர்க்கு போயிட்டு வந்து வாங்கிக்கோ என்றார் முதலாளி .

சங்கரன்கோவில் தொடர் வண்டி நிலையத்தில் காலை 07:32 க்கு சென்னையிலிருந்து வரும் பொதிகை விரைவு தொடர் வண்டியில் வரும் கெளதமுக்காக 6 : 30 மணி முதலே காத்திருந்தாள்..

விவசாய வேலைக்கு அவ்வழியே சென்ற பொன்னாத்தாக் கிழவி அபிராமி மகள் தான் நீ ,என்னாத்தா இங்க இந்த நேரத்துல வந்து இருக்க.. என்று கேட்க..
உறவுக்காரர்க ரயிலில் வாராக அதன் அவர்களை அழைச்சிட்டு போக வந்தேன் என்றாள் திரிஷா..

நீ வேற அழகா இருக்க தனியே இருக்க அதுவும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல எதாவது ஒன்று ஆச்சுன்னா என்ன செய்வ ..ஊர்க்குள்ளவே பள்ளிக்கூடம் போயிட்டு வரக்கூடிய அழகான பிள்ளைகள் பின்னாடியே வீடு வரைக்கு வாராங்க வெட்டி பயலுக.. பார்த்து இரு ,என்று சொல்லி நடையை கட்டினார் பாட்டி...

ஒரு ஆட்டோ வந்து நின்றது அதை பார்த்ததும் சிறிது0 நடுக்கம் கொடுத்தது திரிஷாவுக்கு....

அடுத்து என்ன நடந்தது..

....தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்..

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (18-Apr-24, 12:13 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 37

மேலே