பெற்றோர் தின சிறப்பு கவிதை

💐💐💐💐💐💐💐💐💐💐💐

*பெற்றோர் தின*
*சிறப்பு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💐💐💐💐💐💐💐💐💐💐💐

*பெற்றோர்கள் ......*

கடித்தாலும்
சுவைக்கொடுக்கும்
கரும்புகள்....

மிதித்தாலும்
தூய்மைப்படுத்தும்
மிதியடிகள்....

சுட்டாலும்
வெண்மை தரும்
சங்குகள்....

புகைந்தாலும்
வாசனை தரும்
ஊதுபத்திகள்.....

உருகினாலும்
வெளிச்சம் தரும்
மெழுகுவர்த்திகள்.....

கசக்கினாலும்
சாறு கொடுக்கும்
கனிகள்.....

பிள்ளை பூமிகள்
செழிப்பாக வளர்ந்திட
கைமாறு கருதாமல்
வியர்வை மழை வடிய
உழைத்திடும்
கார்மேகங்கள்....!

உதிரத்தைப் பாலாக்கி
ஊட்டியவளையும்..
வேர்வையைப் பணமாக்கி
வளர்த்தவரையும்....
மனிதர்களாக்கிக் கூட
பார்க்க முடியாமல்
போனவர்களே....!
உங்களுக்கு
இதயத்தில்
ஈரம் இல்லையா ?
இதயமே இல்லையா..?

உயிர் கொடுத்து
உடல் கொடுத்து
பெற்றெடுத்து
பெயர் கொடுத்து
பால் கொடுத்து
அன்பு பாசம் கொடுத்து
ஆடை கொடுத்து
அடைக்களம் கொடுத்து
அடையாளம் கொடுத்து
படிப்புக் கொடுத்து
பட்டம் கொடுத்து
வேலை கொடுத்து
துணை கொடுத்து
வாழ வழி கொடுத்த பெற்றோர்களுக்கு.....
கடைசியில் "வலி "மட்டுமே கொடுக்கின்றவர்களே !
உங்களுக்கு
நரகத்தில் கூட
இறைவன்
இடம் கொடுக்க மாட்டான்....!

முதியோர் இல்லத்தில் வைத்து
கறிச்சோறு போட்டாலும்
பெற்ற பிள்ளைகளோடு அமர்ந்து
பழையச்சோறு
உண்ணும் போது
உண்டாகும்
சுகத்தையும்
சுவையையும்
பெற்றோர்களுக்குக்
கொடுத்து விடாது என்பதை
நீங்கள் எப்போது
உணரப் போகிறீர்கள்...?

முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும் என்பதை
நன்கு அறிந்திருந்தும்....
பலர் பாவங்கள் செய்யது தான்
இவ்வுலகில்
விந்தையிலும் விந்தையட...

இமையாய் இருந்த
பெற்றோர்களை
சுமையாய்
நினைக்கின்றவர்ளே....!
நாளை
உன் பிள்ளைகளுக்கு
நீ சுமையாகும் போதாவது
உன் பெற்றோரின்
வலிகளை நீ உணர்வாயா..?

பெற்றோரை
தெய்வத்தோடு ஒப்பிடலாம்...
ஆனால்
தெய்வத்தைக் கூட
பெற்றோரோடு
ஒப்பிட முடியாது...!

இனியாலது
பெற்றோர்களை மதிப்போம்...!
பெற்றோரை பாதுகாப்போம்...!

♥அனைவருக்கும் என் இனிய பெற்றோர் தின நல்வாழ்த்துகள்.....♥

இவண்
*கவிதை ரசிகன்*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

எழுதியவர் : கவிதை ரசிகன் (1-Jun-24, 7:23 pm)
பார்வை : 35

மேலே