கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

தோற்றம் கண்டு
ஏமாற்றம் கொள்ளாதே/
ஏற்றமான விஞ்ஞானத்தின்
மாற்றம் இதுவே/
தோற்றுப் போகிறது
இயற்கை வளமெல்லாம்/
செயற்கையின் வளர்ச்சி
வியர்ப்பைக் கொடுப்பதனாலே/
ஏளாம் அறிவையும்
கடக்கிறான் ஆறாமறிவாளி/
ஆகையால் மனங்களை
மயக்குகிறான் சாயங்களாலே/
வேரோடிய நிலமெல்லாம்
தாரோடிய பாதைகளே/
பாறையிலும் செடிகொடி
படர்வதைப் பாருங்களேன் /
ஆக்கமும் ஊக்கமும்
அறிவும் அதிகரிப்பினாலே/
வேலிகளும் போலிகளாகலாம்
கண்ணை நம்பாதே/