குடி
‘அரசு அல்ல ..
ஆள்குடி!
அது வாழ்க வாழ்க’
என்றார்.
பிறகு அவரே,
‘ஆள்குடி
வாழ்குடி
லால்குடி
குடிமக்கள்
குடிசெய்வல்…’
என்று அடுக்கிவிட்டு
தடுமாறி எழுந்து நின்றார்.
‘அந்தக் குடி வேறு;
இந்தக் குடி வேறு’
என்று சொல்ல மிகவும் விரும்பினேன்.
அதற்குள், பாவம், இறந்து விட்டார்!