pudhuyugan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : pudhuyugan |
இடம் | : இலண்டன் |
பிறந்த தேதி | : 05-Apr-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 2263 |
புள்ளி | : 328 |
இயங்கும் களங்கள்: சிறுகதை, புதினம்,கட்டுரை,மரபு மற்றும் புதுக்கவிதை. இலண்டன் உயர்கல்வி கல்லூரி ஒன்றின் துணை முதல்வர். 1994 ஆம் ஆண்டில் குமுதத்தில் வெளியான 'தாய்மை' என்ற குறுங்கதையின் மூலம் துவங்கியது என் பயணம். பின் கணையாழி, கல்கி, முல்லைச்சரம் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள். எழுதிய நூல்கள்: 'சமுத்திர சங்கீதம்' - 2005 [மாயா யதார்த்த புதினம்]. 'Air Fire & Water' - 2010 [இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றிய ஆங்கில நூல்]. 'கதவு இல்லாத கருவூலம்' - 2013 [கவிதைத் தொகுப்பு]. 'மடித்து வைத்த வானம்' - 2013 [கவிதைத் தொகுப்பு]. ஆய்வுகள் / பேச்சுக்கள்: 2010 ஆம் ஆண்டின் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிலும், கலிபோர்னியா தமிழ்க் கழக மாநாட்டிலும் ஆய்வுக்கட்டுரைகள். கம்பன் கழகத்தில் / விழாவில் உலக இலக்கிய நோக்கில் கம்பனைப் பற்றிய ஆய்வுகள். கலைஞர் தொலைக்காட்சியில் எனது நேர்காணல் :http://www.youtube.com/watch?v=aNv5ZGW681s Blogs: http://www.pudhuyugan.blogspot.com/ http://pirakuthuyugam.blogspot.com
முதற்காற்று அடிக்கும் வரை
மூச்சைப் பிடித்திருக்கும்
கட்டி வைத்த பொய்
தமிழ்நாடு அரசால் அயலகத்தமிழர் தினம் 2024ல், மணிவாசகர் பதிப்பகம் பதிப்பித்து நான் எழுதிய ‘ஒளி உறுமும் கான்’ என்ற கவிதைத் தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது.
‘மிஞிலி, பிராட்டி, முகுள்' என்ற சிறுகதை நூலும் சனவரி திங்களில் வெளியானது என்பதை நண்பர்களுக்கு தெரிவிக்க விழைகிறேன். அறிமுகமானது. படைப்புத்திறனைப் பாராட்டி தமிழ்நாடு அரசு பாராட்டுச்சான்றுகள் வழங்கிய இத்தருணத்தின் மகிழ்வை எம்மோடு சேர்ந்து கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. அன்பாள்க!
அன்புடன்
புதுயுகன்
அயலகத்தமிழர் தினம் 2024
தமிழ்நாடு அரசால் மணிவாசகர் பதிப்பகம் பதிப்பித்து நான் எழுதிய ‘மிஞிலி, பிராட்டி, மூகுள்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. ‘
ஒளி உறுமும் கான்’ என்ற கவிதை நூலும் பெருவெளியில் சனவரி திங்களில் அறிமுகமானது.
படைப்புத்திறனைப் பாராட்டி தமிழ்நாடு அரசு பாராட்டுச்சான்றுகள் வழங்கிய இத்தருணத்தின் மகிழ்வை எம்மோடு சேர்ந்து கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. அன்பாள்க!
அன்புடன்
புதுயுகன்
முங்கு போடு படகு விடு
வூட்டுக்குள்ளே அரசு நடத்து
நாக்காலயே வாக்காளருக்கு
ஊரு சிரிக்க நாமம் போடு
அம்மா ஒட்டு வாங்கலையோ ஒட்டு!
ஐயா ஒட்டு வாங்கலையோ ஒட்டு!
கூவாங்கரை, கிழக்குக்கரை
நாறுதுங்க காலக்கரை
மழைக்கு நனைஞ்ச சென்னைக்கரை
முதக்குதுங்க முதலையோட
அம்மா…. ஒட்டு வாங்கலையோ ஒட்டு!
ஐயா…. ஒட்டு வாங்கலையோ ஒட்டு!
துட்டுக்கு ஒட்டு… ஓட்டுக்குத் துட்டு…
ஓடு ஓடு ஒட்டு போடு
முங்கு முங்கு முங்கு போடு
கண்ணாரக் கண்டு கண்கோடி போச்சு
நாலாயிர திரவியம் பிரபந்தம் ஆச்சு
(நேரிசை ஆசிரியப்பா)
முங்கா முன்னன் முன்ஊழ் முந்தும்
செங்கோன் தரையின் செலவும் சீலமும்
ஒளிர்வு தில்லம் ஓங்க பஃறுளி
குளிரெடு பறவை குன்றென் றேகியே
இலக்கணம் அகத்தியம் இலங்கிட அறம்புறம்
துலக்கும் துணிவே தொல்நூல் காப்பியம்
விரிவின் வாழ்வதே விழிகொள் ளாகலும்
அரியதே உரியது அருந்தமிழ்ச் சங்கம்
எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும்
கட்டும் பாடலும் கவிகளுங் கணக்கே
அவ்விடம் பறந்து ஐயோ வென்றே
செவ்வியப் புலமை செவிவிரித் தறிய
ஈதே கல்வி என்கொல்
யாதும் ஊரே யாவரும் கேளிரே!
‘கரிமேடு காமராசர்’ ஜான் மோசஸ் என்றும் வாழ்வார்!
கவிஞர் இரா. இரவி !
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதை
இனிவரும் சமுதாயம் நம்ப மறுக்கும்!
காந்தியடிகளுக்கு சொன்ன வாசகம்
கரிமேடு காமராசருக்கும் பொருந்தும்!
பணத்தை பெரிதாக மதித்து நடக்காமல்
குணத்தை பெரிதாக நினைத்து நடந்தவர்!
தொண்டர்களின்பால் அன்பு செலுத்திய அன்பாளர்
தொண்டு செய்வதை கடமையாகக் கொண்டவர்!
கவிஞர்களை மேடையேற்ரி அழகு பார்த்தவர்
கவியரங்கங்கள் நடத்தி நற்கருத்தை விதைத்தவர்!
பெரிய மனிதர்களை மதுரைக்கு அழைத்து வந்து
பெரும் கூட்டங்கள் நடத்திய செயல் வீரர்!
எளிமையின் சின்னமாக என்றும் வாழ்ந்தவர்
என்றும் காமராசரின் தொண்டராக வாழ்ந்தவர்
நூல்: ‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ (வெளியீடு: வானதி பதிப்பகம்)
நூலாசிரியர்: கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்
விமர்சனம்: கவிஞர் புதுயுகன்
__________________________________________________________________________________
*********** எளிமை சூழ் எழில்கள் ***********
__________________________________________
“நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்…”
பாரதியாரின் இந்தப் பதவிப் பிரமாணத்தை அடியொற்றி அணிதிரண்டது கவிஞர் பட்டாளம். அதில் தனக்கானதொரு தனித்த அடையாளத்தை ஏற்று தொடர்ந்து இயங்கி வருகிற கவிஞர் திரு. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள்.
மழையின் மனதிலே !
நூல் ஆசிரியர் : கவிஞர் புதுயுகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை,
சென்னை-600 108. விலை : ரூ. 60.
*****
‘மழையின் மனதிலே’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது. நூல் ஆசிரியர் இனிய நண்பர் கவிஞர் புதுயுகன் அவர்கள், நம்மை ஆண்ட இங்கிலாந்துக்காரர் வாழும் இலண்டன் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றிக் கொண்டே கவிதைத் துறையிலும் முத்திரைப் பதித்து வருபவர். முகநூலில் நல்ல பதிவுகள் செய்து வருபவர்.
இந்நூலில் சாகித்ய அகதெமி விருதுக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், கவிதை உறவு ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார
வணக்கம் நண்பர்களே
பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் இராசராசனை துரத்த வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை
' உடையார்'
ஆறு பாகங்கள் கொண்ட நாவல். சுமார் மூவாயிரம் பக்கங்கள். உங்களுக்கு சோழ தேசம் கான வேண்டுமா? இராசராசனோடு வாழ வேண்டுமா? அவனோடு சேர்ந்து பெரிய கோவில் கட்ட வேண்டுமா? வா என்று கை பிடித்து அழைத்து போகிறார் ஆசிரியர், ஒரு அரசன் எப்படி இருப்பான் எப்படி பேசுவான் எப்படி நடப்பான் எப்படி உத்தரவு போடுவான் இத்தனையும் அவ்வளவு அழகாக சிறிதும் பிசகாமல் கம்பீரமான இராசராசனை நீங்கள் பார்க்கலாம்.
சுந்தர சோழனுக்கு பிறகு இராசராசன் அரசர் ஆகவில்லை என்றால் இன்று தமிழ் இல்லை,
தமிழ்
கவிஞர் புதுயுகனின் `மழையின் மனதிலே’ கலைத்தாயின் மனதிலே நீங்கா இடம் பெறும் சிந்தனைப் பெட்டகம், சீரிய கவிச்சித்திரம்
---------------------------------------------------------------------------------------------------------------------
இலக்கியம் என்றுமே வாழ்க்கையின் நல்லதொரு விமர்சகன். பேரிலக்கியங்கள் இலக்கியம் எப்பொழுதுமே வாழ்க்கையினைப் பற்றிய விமரிசனங்களை முன் வைக்கத் தவறுவதில்லை, தட்டிக்கொடுப்பதோ, தட்டிக் கேட்பதோ.. இலக்கியம் அதன் வேலையினை செவ்வனே செய்து கொண்டுதானிருக்கிறது.. புக்கர் பரிசு பெறும் நாவல்களிலிருந்து தமிழ் புதுக்கவிதை வரை அதற்கு விதி விலக்கல்ல எனத் தோன்றுகிறது..
அப்படி.. வ
கவிஞர் புதுயுகனின் `மழையின் மனதிலே’ கலைத்தாயின் மனதிலே நீங்கா இடம் பெறும் சிந்தனைப் பெட்டகம், சீரிய கவிச்சித்திரம்
---------------------------------------------------------------------------------------------------------------------
இலக்கியம் என்றுமே வாழ்க்கையின் நல்லதொரு விமர்சகன். பேரிலக்கியங்கள் இலக்கியம் எப்பொழுதுமே வாழ்க்கையினைப் பற்றிய விமரிசனங்களை முன் வைக்கத் தவறுவதில்லை, தட்டிக்கொடுப்பதோ, தட்டிக் கேட்பதோ.. இலக்கியம் அதன் வேலையினை செவ்வனே செய்து கொண்டுதானிருக்கிறது.. புக்கர் பரிசு பெறும் நாவல்களிலிருந்து தமிழ் புதுக்கவிதை வரை அதற்கு விதி விலக்கல்ல எனத் தோன்றுகிறது..
அப்படி.. வ