தமிழ்நேயன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழ்நேயன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Sep-2015
பார்த்தவர்கள்:  269
புள்ளி:  19

என் படைப்புகள்
தமிழ்நேயன் செய்திகள்
தமிழ்நேயன் - கோபிநாதன் பச்சையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Jan-2016 7:44 pm

வான்நிலவு வாடிப்போகுதே - அவள்
கண்கள் கண்டு தாழ்ந்து போகுதே

மேகப்போர்வை பின்னால் ஒளிந்து
வேகமாக போர்த்திக்கொள்ளுதே

வானில் தன்னை அழித்துவிட்டு
மீண்டும் புதிதாய் வரைந்துகொண்டு
பௌர்ணமியில் போட்டிக்கு அழைக்குதே....

கலங்கி போவாய் வெள்ளி நிலவே
களங்கம் இல்லா அவள் கண்கள் கண்டே..

கலப்பை கண்ணால் நெஞ்சை உழுது
காதல் விவசாயம் செய்பவள் அவளே

ஆண் இருவர் நிலவு சென்றார்
மணல் மட்டும் கொண்டு வந்தார்
பெண்ணிவளும் சென்றிருந்தால்
பூக்களுடன் வந்திருப்பாள்
வான் நிலவில் கூட – பிராண
வாயு கொடுத்திருப்பாள்

காட்சியிலே பிழை கொண்டேன்
கற்பனையில் வாழக்கண்டென்
காணுகின்ற காட்சிகளின்
அர்த்தங்கள் மாறக

மேலும்

மிகவும் நன்றி நண்பரே........ 09-Feb-2016 5:40 pm
சிறப்பான கவிதை 09-Feb-2016 1:55 pm
தங்கள் பாராட்டிற்கு மிகவும் நன்றி அம்மா.... 05-Feb-2016 3:17 pm
தமிழ்நேயன் - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2016 11:31 pm

திங்கள் பத்து சுமந்து பெற்றத்
தங்க மகனைப் போற்றிக் காத்து
பொங்கு கின்ற அன்பால் பேணி
சிங்கம் போலே வளர்த்து விட்டோம் !

கற்றக் கல்வி பேரைக் கொடுக்க
உற்ற மனைவி வந்த வுடனே
சுற்றம் மறந்து போன தேனா
பெற்றோர் மனமும் வாட லாமோ ?

மேலை நாட்டுப் பகட்டும் ஈர்க்க
வேலை பார்க்க வெளியூர் சென்று
சோலை யான வாழ்வைத் துறந்து
பாலை வாழ்வில் லயிக்க லாமோ ?

வேண்டு மட்டும் சேர்த்தப் பின்னே
மீண்டும் திரும்பி வருதல் நன்றே
தூண்போல் பெற்றோர் தனியே தவிக்க
மாண்டால் வரவும் மனமும் உளதோ ?

இதயம் கசியும் இழப்பின் வலியால்
நிதமும் துடித்து வெடிக்கும் உள்ளம்
உதவி யின்றிக் குமுறும் நெஞ்சம்
சிதறி

மேலும்

தாயின் குமுறல்கள் வரிகளில்.......வலியாய் நெஞ்சை தைக்கின்றது....சிறப்பான படைப்பு அம்மா....!! 09-Feb-2016 10:57 am
அருமை 09-Feb-2016 10:32 am
தாய்மையின் பெருமை..தனிமை.. வலிகள்.. ஒரு நல்ல படைப்பு..பெற்ற தாயை தனது சுயநலத்துக்காய் புறக்கணிக்கும் மக்களுக்கு ஒரு சவுக்கடி கொடுக்கிறது. (படம் மிக அருமை ) 09-Feb-2016 6:49 am
கற்றக் கல்வி பேரைக் கொடுக்க உற்ற மனைவி வந்த வுடனே சுற்றம் மறந்து போன தேனா பெற்றோர் மனமும் வாட லாமோ ? .................... அருமையான வரிகள் 09-Feb-2016 12:22 am
தமிழ்நேயன் - கோபிநாதன் பச்சையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2016 3:26 am

உயர்வு தாழ்வு பிரிவு - அறியா
உள்ளங்கள் இணையும் உறவு
களவு செய்யும் கனவு - காதல்
களங்கம் இல்லா உறவு

விழியின் வழியே நுழையும் - உள்ளம்
விழிப்பு நிலையிலும் கரையும் - பார்வை
விடையை எழுப்பி வினாக்கள் கேட்கும் - காதல்
கனவில் மட்டும் ஒத்திகை பார்க்கும்

ஆத்மாவின் வடிவென்ன - யாரும்
கண்டதுமில்லை காணப்போவதுமில்லை
யாக்கையென்ற விளக்கினிலே -உயர்
ஆத்மா சோதி எரிந்திடவே
உருகும் நெய்யே காதல் என்று
உணரா மனிதர் சாதல் நன்று

பாதியில் வந்த சாதியும் இங்கு
ஆதியில் வந்த காதலை கொல்லுமோ - ஆத்ம
சோதியில் கலந்திட்ட காதலை அழிக்க
ஆண்டவனே நினைத்தாலும் - அது
தற்கொலைக்கு சமமன்றோ

சாதியென்ன மதமென்ன - குல

மேலும்

மிகவும் நன்றி நண்பரே..... 09-Feb-2016 1:00 pm
அருமை நண்பா .... 09-Feb-2016 10:27 am
தமிழ்நேயன் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
27-Jan-2016 1:59 pm

பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் இராசராசனை துரத்த வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை
' உடையார்'
ஆறு பாகங்கள் கொண்ட நாவல். சுமார் மூவாயிரம் பக்கங்கள். உங்களுக்கு சோழ தேசம் கான வேண்டுமா? இராசராசனோடு வாழ வேண்டுமா? அவனோடு சேர்ந்து பெரிய கோவில் கட்ட வேண்டுமா? வா என்று கை பிடித்து அழைத்து போகிறார் ஆசிரியர், ஒரு அரசன் எப்படி இருப்பான் எப்படி பேசுவான் எப்படி நடப்பான் எப்படி உத்தரவு போடுவான் இத்தனையும் அவ்வளவு அழகாக சிறிதும் பிசகாமல் கம்பீரமான இராசராசனை நீங்கள் பார்க்கலாம்.
சுந்தர சோழனுக்கு பிறகு இராசராசன் அரசர் ஆகவில்லை என்றால் இன்று தமிழ் இல்லை,
தமிழ்

மேலும்

நன்று சிநேகமாய் புதுயுகன் 20-Jun-2016 12:01 am
பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் சோழர்களுடன் வாழ வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை ' உடையார்' 15-Apr-2016 10:15 pm
தமிழ்நேயன் - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jan-2016 9:37 am

அந்தோ..மாய‌ உலகமடா!
மறைந்து போனது மனிதமடா
எங்கு பார்த்தாலும் கலகமடா
ஊற்றெடுப்பதெல்லாம் உதிரமடா...


உலகில் நிம்மதி இல்லையடா
நடப்பதெல்லாம் கோர யுத்தமடா
அழியும் உயிர்கள் அதிக‌மடா
துப்பாக்கி குடிப்பது இரத்தமடா...


யுத்தம் எங்கும் இருக்குதடா !
சித்தம் கலங்கி நிற்குதடா !
பித்தன் ஆகி அலையுதடா !
மொத்தம் போராய் ஆகுதடா !



பக்தி மார்க்கம் வேணுமடா !
முத்திக் கிடைக்கும் நிஜமடா !
சக்தி உன்னைக் காப்பாளடா !
யுத்தம் வேண்டாம் கைவிடடா !


இனிதை செய்து வாழிந்திடடா !
புனிதம் உன்னைச் சேருமடா !
மனிதம் செழிக்க வகைசெய்யடா !
தினமும் இதையே நினைத்திடடா!!!


நல்லது செய்ய

மேலும்

மிக்க நன்றி 25-Jan-2016 5:41 pm
மிக்க நன்றி 25-Jan-2016 5:40 pm
அருமை ,, 25-Jan-2016 1:34 pm
kaviyin ovvoru variyum narampukul nulainthu puthiya uthiram pukuththi vaalkkaiyai poraata seykirathu 25-Jan-2016 11:40 am
தமிழ்நேயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2016 10:46 am

🌳🌴எம் புள்ள 🌿🌾

வலிக்காம புள்ள பெத்த பூரிப்பு
குடும்பம் காக்க ஒரு - குலவெலக்கு
பட்டினி நான் கெடந்தாலும் உன்ன
பசிக்க நான் விட்டதில்ல - இருக்க
இடமில்லாம தவிச்ச நேரத்துல
காத்துமழை கண்டு கலங்கிய - வேலையில
கோணிபையேட உன்ன கோத்து அனைச்சிகிட்டேன்
என் கூதை போக்கிக்கிட்டேன்...

*
நீ குரல் எடுத்து கூப்பிட்டா - என்
குலை நடுங்குதே
ஓடி வந்து நான் - தவிக்க
ஒன்றுமில்லை என நீ மொரைக்க
சிரிச்சி தொலைச்சி புன்டேன் - என்
தவிப்ப சொல்லி புட்டேன்
ரெண்டு ஒன்னாச்சி என் - உசுரு
நீ ஆச்சி
குடும்ப உசுரு மூனாச்சி


*

எம்புருசன் படுத்து புட்டான் - சீக்கு
வாந்தி எடுத்துபுட்டான்
கஞ்சிக்கே

மேலும்

கவிதை முயற்சி தான் உறவே . நன்றி 25-Jan-2016 8:57 pm
பாடல் முயற்சியோ..... அருமை தொடரட்டும்......... 25-Jan-2016 6:28 pm
நன்றி 👍🌹🌺 25-Jan-2016 12:23 pm
படைப்பு யதார்த்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 25-Jan-2016 11:36 am
தமிழ்நேயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jan-2016 9:04 am

தமிழ்த் தாய் வாழ்த்து

🐠🐠தமிழ் முழக்கம் 🐠🐠

"அறம் செய்" அறிவித்த அருந்தமிழே - நீ வாழி..!

ஆண் பெண் நிகரிலக்கணம் அருளினாய் - அழகு தமிழே - நீ வாழி..!

இயல் இசை நாடகம் - ஈன்ற இன்னிசைத் தமிழே - நீ வாழி..!

ஈகை ஒப்புரவு விருந்து இனிதென்றாய் இன்தமிழே - நீ வாழி..!

உயிரே பிரியினும் உன்னை மறவேன்!என்
உவகைத் தமிழே - நீ வாழி..!

ஊன் அறுத்து உயிர் அறுத்து கேட்பினும் உன்னை விட்டு பிரியேன் என் உயிர்த் தமிழே - நீ வாழி..!

"என்றுமுள தென்றமிழ்" என கம்பம் பாடிய கவி தமிழே - நீ வாழி..!

ஏழ் பிறப்பும் இன்பம் தரும் எனையாண்ட என் இன்பத்தமிழே - நீ வாழி..!

ஐந்திணை வகுத்து இவ்வுலகில் ஐயாய்

மேலும்

தமிழ்நேயன் - எண்ணம் (public)
14-Jan-2016 11:03 pm

 மாடு ம்மா....  என்று பசியால் கத்திடா மனசால் செத்து போய்டுவான் தமிழன். தான் பட்டினி கிடந்தாலும் மாட பட்டினி போட மாட்டான். மாடு உடல் நிலை சரியிலாமல் இறந்து போனா ஒரு வாரம் நல்ல சோறு சாப்பிட மாட்டான், மாட்ட விற்றுட்ட ஏதோ எல்லாம் போன மாதிரி மூஞ்ச தூக்கிட்டு சுத்திட்டு இருப்பான்.. கோவதுல ஒரு அடி அடிச்சிபுட்டா அப்புரம் போய் அடிச்சிடனா அடிச்சிட்டனானு தடவி தடவி கொடுப்பான். பாத்து பாத்து தவிடு போட்டு புண்ணாக்கு போட்டு போத்தி போத்தி வளப்பான்... அவன போய் மாட்ட வதைக்ற கொடுமை படுத்துரன் என்று சொன்ன (...)

மேலும்

தமிழ்நேயன் - தமிழ்நேயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Sep-2015 4:09 pm

திசை அறியாத
வாழ்க்கை பயணத்தில்
தொலைநோக்கியாய்
நீ கிடைத்தாய்,
திசைகள் பல
அறிய செய்தாய்
என்
வாழ்க்கை பயணம்
புரிய செய்தாய்,

ஞாயிற்று கிழமையில்
உன் உணவிற்காக
ஏங்கி கிடந்தன
என் நா,
உன் வருகைக்காக
காத்து கிடந்தது
என் கண்கள்,

கதைகள் பல பேசி
கைகலப்பு பலமுறை
நடத்தி விஞ்ஞானமும்
மெய் ஞானமும்
விளங்க வைத்தாய்,

ஊமையின் பாசைதனை
கண்ணால் கற்று தந்தாய்
கண்ணோடு கண்பேசி
இது காதல் இல்லை
என உணரவைத்தாய்,
உனக்கும்
எனக்கும்
ஏனோ அந்த
மூன்றெழுத்து மூர்க்கம்
மட்டும் எட்டி
பார்க்கவேயில்லை,

இரத்த பாசமும் இல்லை
பெத்த பாசமும் இல்லை
ஆனால் ஏனோ
என்னோடு எப்போதும்

மேலும்

நன்றி நண்பா 23-Sep-2015 9:29 am
அழகான நட்பின் வரிகள் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Sep-2015 5:37 am
நன்றி @ஆசை அஜுத் 22-Sep-2015 5:26 pm
உண் - உன் முன்றெறுத்து - மூன்றெழுத்து முவ்வாயிரம் - மூவாயிரம் என்று - என்றும் பதிப்பு மதிப்பாய் ! வாழ்த்துக்கள் !! 22-Sep-2015 4:42 pm
தமிழ்நேயன் - தமிழ்நேயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Sep-2015 11:17 pm

💘கரைந்து கொண்டிருப்பது
கண்ணீர் மட்டுமல்ல
என் உயிரும் தான் 💖

மேலும்

நன்றி உறவே 07-Jan-2016 7:49 pm
நன்றி 🌹 உறவே 07-Jan-2016 7:48 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Sep-2015 12:28 am
அடடே!!! அருமை கவி 20-Sep-2015 10:03 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

thiru

thiru

paramakudi
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
thiru

thiru

paramakudi

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே