குலோத்துங்க சோழன் கோவை - நூல் - எட்டாவது - பாங்கற் கூட்டம் - பாடல் 57

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

கற்றறி பாங்கன் கழறல்.

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

பாங்கன் கிழவோற் பழித்தல்.

கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.

இதுவுமது.

பாங்கன் றன்மனத்தழுங்கல்.

இதுவுமது

பாங்கன் தலைவனோடழுங்கல்.

எவ்விடத் தெவ்வியற் றென்றல்.

அவனஃ திவ்விடத்திவ்வியற் றென்றல்.

பாங்கன் இறைவனைத் தேற்றல்.

குறிவயிற் சேறல்.

இறைவியைக்காண்டல்.

(இ-ள்) அங்ஙனந் தேடிச்சென்ற பாங்கன் தலைவியைக் காணுதல்

கட்டளைக் கலித்துறை

முலையே முறுவன் முலையே நளின முகிழ்மருங்கு
லிலையே வயிறும் வடத்திலை யேயெண்ணி லாதவெண்ணெண்
கலையே தெரியுங் குலோத்துங்க சோழன்கல் யாணி(ப்)பிரான்
மலையே யிடமு மிவரேநங் கோன்சொன்ன மாதருமே! 57

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (11-Jul-24, 7:59 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே