சொல்லாமல் சென்றவனே நண்பனுக்கு கண்ணீர் அஞ்சலி
பள்ளிக்காலத்தில் பகையில் தொடங்கிய
நம் நட்பு ,
பழக பழக சீம்பாலின் சுவையாய் இனித்தது
ஏனோ ?
பழகிய நாட்கள்
நட்பில் நனைந்த நிமிடங்கள்
நினைவில் நின்று - என்
நெஞ்சை கனமாக்குகிறதே !
பள்ளியில் தொடங்கி
பருவங்கள் கடந்து
பலநாள் கழித்து உன்னை காண்கையில் ,
பங்காளி ரெண்டுமாசத்துல கல்யாணம்
கடிதம் கொடுவருவேன் கட்டாயம் வந்துவிடு !
சொல்லிவிட்டு சென்றாய் ...
அடுத்தவாரத்தில்
அடுத்தவன் சொல்லி அறிந்தேன் .
அந்தவாரம்தான் நடந்ததாம் - உன்
அவசரத்திருமணம் ......
அன்று அவசரதிருமணம் அடுத்தவன் சொன்னான் ,
இன்று அவசரத்தில் மரணம் இதையும் அடுத்தவனே சொன்னான்,
அழையா விருந்தாளியாய்
அழுதுகொண்டே நின்றேன் உன் இறுதி சடங்கில்.
காதலித்த பெண்ணை
கரம்பிடித்தாய் என்று - நீ
அழைக்காத போதும் அகம் மகிழ்ந்துபோனேன் ...
மணவாழ்வு ஐம்பது ஆண்டு தண்டவில்லையே
ஐந்து மாதத்தில் அலுத்துவிட்டதா உனக்கு ?
கட்டியமனைவி உன் உடலை
கட்டியபடி கதறியதை கண்டு
கரைந்துபோனதே என் கல்லான நெஞ்சமும் தான்.
என்று உன் வீடிற்கு வந்தாலும்
எழுந்து வந்துவரவேர்க்கும் நீ ,
இன்றுமட்டும் ஏனடா நண்பா
இப்படி உறங்குகிறாய் ?
எழுந்துவாட பங்காளி என
ஏக்கமாய் அழைக்கிறேன் ,
எதையும் காணததுபோல்
எழுந்துவர மறுக்கிறாயே !
நெஞ்சு அடைக்குது நண்பா
மாரடைப்பில் மரணிக்கும் வயதா உனது
என எண்ணிப்பார்க்கும் வேளையில் - என்
நெஞ்சு அடைக்குது நண்பா...
இந்த காட்சியை நானும் காணவா
இனிக்க இனிக்க வந்து
நட்பு கொண்டாய் ?
கள்ளமில்லா உன் முகத்தை
கட்டிலிலே கண்டவேளை
கலங்கி நின்றே எண்ணிக்கொண்டேன்
கயவன் அந்த கடவுள் என்று...
நீ ஒருமுறை மரணித்தாய் - இனி
உன் நினைவுகள் வரும் நேரங்களில் - நான்
ஒவ்வொரு முறையும் மரணிப்பேனே..
நீ என்னைவிட்டு செல்லவில்லை
என் நினைவுகளில் தங்கிவிட்டாய் .
உன் ஆன்மா சாந்திகொள்ள
தமிழன்னை அவள் தயை புரிவாள் ..........
(என் நட்பை உதறிவிட்டு இன்று காலனிடம் நட்பு கொண்ட என் நண்பன் வேணு குமாருக்கு இந்த
கவிதையால் அஞ்சலி செலுத்துகிறேன் ....)