நதிபோல வந்தாயே நீ

விடியலைத் தேடிடும் வானம் இரவின்
முடிவுரை தன்னை மகிழ்ந்து எழுத
கதிர்விரிந்து காலைக் கவிதை வரைய
நதிபோல வந்தாயே நீ

---இரு விகற்ப இன்னிசை வெண்பா

விடியலைத் தேடிடும் வானம் இரவின்
முடிவுரை தீட்ட மகிழ்ந்து- நெடிய
கதிர்விரிந்து காலைக் கவிதை வரைய
நதிபோல வந்தாயே நீ

-----இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-24, 10:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே