கவலை தரும் கவிதை
மலையின் பாரம் மனதில்
சொல்லிட வில்லை எளிதில்
உடைகிறேன் நான் தனிமையில்
தேற்றுவார் இல்லை அருகினில்
வலிகளை உணரும் தருணம்
தாய்மடி மனம்தான் தேடும்
ஓரமாய் கண்ணீர் ஓடும் - விழிகள்
உறங்கிட எப்படி மூடும்
தீரும் கவலைகள் என்றே
முடீந்திடும் இரவுகள் இங்கே
உறங்கிடா விழிகளின் ஏக்கம்
சொல்லிட மொழிகள் எங்கே
மனம் வேண்டிடும் தாலாட்டு
ஆறுதலாய் ஒரு பாட்டு
மனம் தேடி தேடி அலைகிறதே
எந்தன் மனதின் நிலை அதுவே