காதல்
அவள் அழகில் மயங்கிய நான்
அவள் அழகிற்கோர் கவிதை எழுத
எண்ணி வரிகளைத் தேடி அலைய
என்னருகே வந்து நின்றாள் பாவையவள்
காவியா என்பெயர் என்று தன்னையே
அறிமுகம் செய்து கொண்டு இனிஎன்னவேடும்
காதலே காவியமாய் ஓர் ஓவியமாய் என்முன்
நிற்க எனது கவிதை எழுதும் முயற்சி
முற்றுப் பெற்றது காதல் மலர