செவி கொடுங்கள்ooo மரம் பேசுகிறேன்
#செவி கொடுங்கள்..
மரம் பேசுகிறேன்
விதைகள் தருவேன் நானே
விதைத்தால் நன்மை தானே..!
வதைத்தால் வம்பில் வீழ்வீர்
வானம் பொய்க்கும் பாரீர்..!
குடிக்கத் தண்ணீர் வேணும்
கும்பிக்குச் சோறும் வேணும்
செடியும் மரமாய் நாங்கள்
செழித்தால் பசிக்கு வரங்கள்..!
வேரொடு சாய்க்கும் எண்ணம்
வைத்தால் பஞ்சம் திண்ணம்
பாரினில் மழையின் தூதர்
எம்
பசுமையில் நீங்கும் பேரிடர்..!
வைப வங்கள் தோறும்
வழங்கு கன்றாய்ப் பரிசும்
பையச் செழிக்குமென் குடும்பம் - கண்டு
பசியொடு பஞ்சம் நடுங்கும்..!
மழலைக்கு எடுத்துக் கூறு
மரங்களின் மகத்துவம் நூறு
உழவைப் பெருக்கும் வழிதான்
உரமாய் அறிவுரைத் தேன்தான்..!
#சொ.சாந்தி