நூல் மதிப்புரை நூல் பெயர் திரைச்சுவடுகள் நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் திருமதி இர ஜெயப்பிரியங்கா
நூல் மதிப்புரை
நூல் பெயர் : திரைச்சுவடுகள்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : திருமதி. இர. ஜெயப்பிரியங்கா
வெளியீடு : வானதி பதிப்பகம்,
23, தீனதாளு தெரு,
தி. நகர், சென்னை – 17.
விலை : 160 பக்கங்கள் : 177
ஐயா அவர்களின் 35-ஆவது நூல் திரைச்சுவடுகள். தான் திரையரங்கு சென்று பார்த்த படங்களின் விமர்சனங்களை நூல் ஆக வடித்துள்ளார்.
மனிதன் தன் ஓய்வு நேரத்தை முற்காலத்தில் நாடகம் பார்த்து மகிழ்ந்திருந்தான். தற்காலத்தில் அது திரைப்படமாக உள்ளது.
54 திரைப்படங்களின் மதிப்புரைகள் அடங்கிய நூல் திரைச்சுவடு. நூலின் முன் அட்டைப்படம் விமர்சிக்கப்பட்ட படங்கள் சிலவற்றின் நடிகரின் படங்களும் நூலின் பின் அட்டைப்படத்தில் நடிகர் சத்யராஜ் அவர்களின் வாழ்த்துரையும் உள்ளது. நூலின் உள்ளே பல நாடகங்களின் ஆசிரியர் ஐயா இராமசாமி அவர்களின் வாழ்த்துரை இடம்பெற்றுள்ளது. நூலின் இறுதி பக்கங்களில் இயக்குனர் பாலு மகேந்திரா பற்றிய ஒரு கவிதை உள்ளது.
இந்நூலின் எனக்கு பிடித்த சில படங்களின் விமர்சனங்களில் சில
மாயாண்டி குடும்பத்தார்
அண்ணன், தம்பி பாசமும் குடும்ப ஒற்றுமையும் ஒருங்க அமைந்துள்ளது.
பசங்க
பள்ளி மாணவர்களின் எதார்த்த தினசரி வாழ்வியலை படமாக வடித்துள்ளனர்.
கனா
இப்படத்தில் ஒரு கிராமத்து பெண் மட்டை விளையாட்டு விளையாடுகிறாள் ஏச்சு, பேச்சு, கேவலம் என எல்லாவற்றையும் கடந்து வெற்றிபெறுகிறாள்.
சாட்டை
அரசுப்பள்ளிகளின் தரத்தையும் மாணவர்களின் கல்வி தரத்தையும் உயர்த்த எழுந்த படம்.
மஞ்சப்பை
இப்படம் தாத்தா பேரன் அன்பு, முதியோரை மதிக்க வேண்டும் என்பது.
அப்பா
மகனை சுயமாக சிந்திக்க விட்டு சாதனையாளனாக உருவாக்கிய அப்பா.
வாகைசூடவா
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பாத்திரமாக விமல் படத்தின் இறுதியில் தனக்கு கிடைத்த அரசு பணி விடுத்து மாணவர்களுக்காக கிராமத்து பள்ளியிலேயே பணிபுரிய சம்மதித்தது படத்தின் வெற்றி
7-ஆம் அறிவு
போதி தர்மன் நம் தமிழர். அவரை சீனர்கள் கடவுளாக வணங்குகின்றனர். வர்மகலை நம்மில் பலருக்கும் தெரியாது. இவற்றை படத்தின் முன் காட்சியாகவும் படத்தின் இறுதியில் வாசலில் சாணம் தெளிப்பது, மஞ்சள் பயன்படுத்துவதின் காரணகாரியங்கள் மிகச் சிறப்பாக படத்தில் கூறப்பட்டுள்ளது.
மொத்தமாக கூறுவது என்றால் ஐயா அவர்கள் ‘‘திரைச்சுவடு’’ நூலை வடித்து ஒவ்வொரு திரைப்படத்தின் நிறை குறைகளை ‘‘சுருங்கச் சொல்லி விளங்கவைத்துவிட்டார்.’’