திருக்குறள் கிறித்துவ நூல் இல்லை — 4 2
திருக்குறள் கிறிஸ்தவ நூல் - இல்லை !
+++
யாதுமறியான்.
+++
4/2
இழிவானவரா இயேசு கிறித்து ?
---
திரித்துவம் என்ற கொள்கை ( தந்தை மகன் தூய ஆவி ), கிறித்துவத்தில் கிபி நான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் நிசேயா கூடுகையின்போதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்டது றஎனக் கூறப்படுகிறது . ஆனாலும் தந்தையாகிய கடவுள், மகனாகிய இயேசு கிறிஸ்து இருவரும் ஒருவரே என்றே பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். புனித தோமா கூட இயேசுவை என் ஆண்டவரே என் கடவுளே என அழைப்பார் .
தந்தையாகிய கடவுளே, மனிதர்கள் விலங்குகளின், மீன்களின் இறைச்சியைப் புசிப்பதற்கு அனுமதி அளித்துள்ளார்.
"மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நடமாடி உயிர்வாழும் அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும். உங்களுக்குப் பசுமையான செடிகளை உணவாகத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.
( தொடக்கநூல் 9: 2 & 3 )
மனிதனுக்கு விலங்குகளை அடித்து , புசிக்க அனுமதி அளித்த கடவுள், தனக்கும் மனிதர்கள் பல்வேறு பலிகளைச் செலுத்த ஆணையிட்டுள்ளார். லேவியர் ஆகமத்தில் இது தொடர்பாக விரிவான நெறிமுறைகளைக் கொடுத்துள்ளார்.
எடுத்துக்காட்டாக
" அவரது நேர்ச்சை எரிபலி எனில், மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட, பழுதற்ற ஒரு காளையை அவர் படைக்கவேண்டும். ஆண்டவர் திருமுன் ஏற்புடையதாகுமாறு, அதைச் சந்திப்புக் கூடார நுழைவாயிலில் அவர் படைக்கட்டும்.
( லேவி 1:3 )
அந்த இளம் காளையை அவர் ஆண்டவர் திருமுன் அடிப்பார். ஆரோனின் புதல்வராகிய குருக்கள் அதன் இரத்தத்தைக் கொண்டு வந்து, சந்திப்புக் கூடார நுழைவாயிலில் இருக்கும் பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளிப்பர்.
(லேவி 1:5 )
- தொடரும் 5/2