வலி
என் தந்தையின்
வியர்வைத்துளிகளைப் பிடித்து நான் மெல்ல மெல்ல நடக்கப் பயின்றேன்
இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறேன் திரும்பிப் பார்க்கிறேன் என் தந்தை என்னோடில்லை
எங்கோ ஒரு வாழ்க்கை வளைவில் அவரை நான் தவற விட்டுவிட்டேன்...
கவிஞர் செல்வா
.