காதல் பாலைவனம்
ஒன்று சேர்ந்த
அன்பு உள்ளத்தில்
காதல் நதி
சீராகப் பாயும் வரை
சோலைவனமாக
செழிப்பாக வளரும்
பாதை மாறி பயணம் செய்யும் போது
உணர்வுகளின் வெளிப்பாட்டில்
உஷ்ணங்கள் தோன்றும் போது
உள்ளத்தில் காதல் நதி வற்றிப்போய்
பாலைவனமாக காட்சி தரும் ...!!
--கோவை சுபா