வெற்றிக்கு வழி

முன்னேறியவர்கள்
சொன்னதை
முன் மாதிரியாகக் கொள்
நம்பிக்கைச் செடியை
நட்டு வை
உழைப்பு என்ற
நீரை ஊற்று
நாணயம் என்ற
நல்லுரம் இடு
உறுதி என்ற
வேலி போடு
எதிர்ப்பு என்ற
களைகளை
எச்சரிக்கையுடன்
அகற்று
பொறுமையாய்
காவல் இரு
பின்னர்
வெற்றி
பூவாய்,
காயாய்,
கனியாய்
உன் கையில்!
ஆம்
எல்லாம் உன்
தன்னம்பிக்கையில்