பெருந்தண் உறந்தையார் கோ - முத்தொள்ளாயிரம் 50

நேரிசை வெண்பா

நின்றீமின் மன்னீர் நெருநல் திறைகொணர்ந்து
முன்றந்த மன்னர் முடிதாக்க – இன்றுந்
திருந்தடி புண்ணாகிச் செவ்வி இலனே
பெருந்தண் உறந்தையார் கோ! 50

- முத்தொள்ளாயிரம், சோழன் 25

பொருளுரை:

மன்னர்களே! சற்றே நில்லுங்கள். நேற்று, திறை தந்த மன்னர்கள் வணங்கியபோது அவர்களின் முடி தாக்கி உறையூர் மன்னன் காலடி புண்ணாகிக் கிடக்கிறது. அதனால் இன்று அவன் காட்சி தரவில்லை. அவன் பெருமையும் ஈரமும் கொண்டவன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Oct-25, 1:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே