இரவ
பூமியின் அனைத்து இரகசியத்தையும்
அறிந்து கொண்டு
விரைந்து மறைந்தது இரவு
இரகசியமாகவே..
நித்திரையை இலவசமாய்
தரும் இரவே..
நிம்மதியை இரவல் தருவாயா?
இரவு போர்வைக்குள் எதை மறைக்கிறது
பூமி?
என் எட்ட நின்று பார்த்தது
விண்மீனும் , வெந்நிலவும்..

