இராணுவவீரருக்கு எப்படிநன்றி சொல்வீர் ?
நம் வீட்டு வாசலின்
கோலம் அழியாதிருக்க
தங்களின் உயிர்ப் புள்ளிகளை
அழித்துக்கொள்ளவும்
தயங்காதவர்கள்
நம் தேச இராணுவ வீரர்கள்!
அவர்களுக்கு-
வணக்கம் சொல்லி ஒரு
நாளாவது வரைந்தோமா
வாசலிலே கோலங்கள் ?
இதுதான்
நம் தேசத்தின் நன்றி பாராட்டும்
குணமா சொல்லுங்கள் ?
சரி சரி
இனியொரு விதி செய்வோம் !
ஒவ்வொரு இராணுவ வீரரின்
வீட்டுக்கும் நம்மால் ஆன
சிறு சிறு உதவிகள் செய்வோம் ;
முடிந்தால்-
அவர்தம் வீடுகளில்
தத்து எடுக்காத மக்களாய்
நாம் இருந்து அவர்களின்
பெற்றோரை நாம் காப்போம் !