இராணுவவீரருக்கு எப்படிநன்றி சொல்வீர் ?

நம் வீட்டு வாசலின்
கோலம் அழியாதிருக்க
தங்களின் உயிர்ப் புள்ளிகளை
அழித்துக்கொள்ளவும்
தயங்காதவர்கள்
நம் தேச இராணுவ வீரர்கள்!

அவர்களுக்கு-
வணக்கம் சொல்லி ஒரு
நாளாவது வரைந்தோமா
வாசலிலே கோலங்கள் ?

இதுதான்
நம் தேசத்தின் நன்றி பாராட்டும்
குணமா சொல்லுங்கள் ?

சரி சரி
இனியொரு விதி செய்வோம் !

ஒவ்வொரு இராணுவ வீரரின்
வீட்டுக்கும் நம்மால் ஆன
சிறு சிறு உதவிகள் செய்வோம் ;
முடிந்தால்-
அவர்தம் வீடுகளில்
தத்து எடுக்காத மக்களாய்
நாம் இருந்து அவர்களின்
பெற்றோரை நாம் காப்போம் !

எழுதியவர் : முத்து நாடன் (19-Nov-11, 6:15 pm)
பார்வை : 288

மேலே