ஆதங்கம்

உண்ண உணவு
உடுக்க உடை
இருக்க இடம்
எதுவுமே கிடைக்கவில்லை
என் சாமனியனுக்கு
வறுமைகோட்டிற்குக் கீழ் என பிரித்தாயா?
வாழத்தகுதி இல்லாதவர்கள் என பிரித்தாயா?
கஜானா காலியாமே? என்று
காய்ந்த வயிரோடு சொல்லும் என் மக்கள்
தேர்தலுக்கு செலவிட்ட பணத்தை
கஜானாவில் சேர்த்துவைத்திருந்தால்
பக்கத்து நாட்டுக்கு வட்டிக்கு குடுத்திருக்கலாம்

தங்கத்தின் விலையறிந்து
முதிர்கன்னி என்னை
கிழவனுக்கு மணமுடித்தார்
வற்றிப்போன மார்போடு இருக்கும் எனக்கு
தாய்ப்பால் ஏது?
ஆவின் பாலுக்குக்கூட வக்கில்லை என் குழந்தைக்கு
கணவனை இழந்தேன் கைம்பெண் ஆனேன்
அத்தியாவசிய பொருட்கள் கூட
என்னை விற்றால் தான் கிடைக்கும் போல
விலைவாசி உயர்வால்
விலைமகளாய் போவேனோ?
அரசு பள்ளியில்
சமச்சீர் கல்வியாவது கிடைக்கட்டுமென
ஓடி ஓடி உழைத்தேன்
பேருந்தில் செல்ல வலி இல்லாமல்

ஏழைகள் எங்களை நாடு கடத்திவிடு
அகதிகளாய் அயல் நாட்டில் பிச்சையெடுக்கிறோம்- இல்லயேல்
இலவசமாய் எலிமருந்தயும் சேர்த்து கொடு
விலைவாசி பற்றி பயந்தே சாகாமல் இருக்க

எழுதியவர் : உமா ராஜ் (24-Nov-11, 11:37 am)
சேர்த்தது : umaraj
பார்வை : 216

மேலே