வீரத்தின் தந்தை நேதாஜி ......
நீ எங்கு இருக்கிறாய் என்று
இன்றளவும் யாருக்கும் தெரியாது .......
என்ன ஆனாய் என்று யாராலும்
அறுதியிட்டு சொல்ல முடியாது ........
ஆனாலும் நீ இருக்கிறாய் !
ஒவ்வொரு இந்தியனுள்ளும் இதயமாய் .........
வீரத்தின் உதயமாய் .........
ஹிட்லர் வியந்த மாமனிதனே !
ஆங்கிலேயன் பயந்த இந்தியனே !
அந்நியனை விரட்ட
அனலாய் திகழ்ந்தவனே !
அகிம்சை போதித்த
அண்ணல் வழி செல்லாதவனே!
நீ எங்கு இருந்தாலும்
இருக்கிறது உன் வீரம்
உன் பிறப்பை போற்றும்
என் போன்ற இளைங்கர்களிடம் வித்தாக ..
நீ என்ன ஆனாலும் இருக்கிறது
உன் தீரம் உன் பெருமை போற்றும்
ஒவ்வொரு இந்தியனிடமும்
சுதந்திரத்தின் சொத்தாக ...........
வரலாற்றில் எழுதப்பட வேண்டிய
வங்கத்து சிங்கமே !
ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும்
நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் நித்தமுமே !
வெள்ளையனை பயந்தோட செய்த
கர்ச்சிக்கும் வேங்கையே !
*நேதாஜி* என்று உன் பெயர்
சொல்லும் போதெல்லாம் .......
வீரம் என்னில் நிறைகிறது
என் கைகள் ஜெய் ஹிந்த் என்று சொல்லி
உமக்கு சல்யுட் அடிக்கிறது ........
*ஜெய் ஹிந்த்*
ப.ராஜேஷ்