எனது உயிரைத் தேடி ..!!

உருவங்கள் ஒன்றில்லை
உவமைகளும் ஒன்றாக இல்லை
உள்ளங்கள் மட்டும் பேசியதால்
உணர்வுகள் ஒன்றாகின..!!

என் பெண்மையை
உன்னிடம் கொண்டேன் -தோழியே
உன்னில்
என் தாய்மையை கண்டேன் ..!!

தாயின் கருவறை சுகம்
நான் அறியேன்.
உன் மணவறையில்
நான் கருவாகினேன்..!!

வளர்ந்த குழந்தையாய் என்னை
உன் நெஞ்சில் தாலாட்டி,
மடியில் இட்டு சோறும் ஊட்டி,
சிறு காயம் கண்டால் கூட கலங்கினாய்
என்னை நேசிந்து உந்தன் மகளாகினாய்..!!

உன்னை கன்னட நாள் முதல்
உயிரில் கலந்த நாள் வரை
கண்டதில்லை சோகம்
கொண்டதில்லை துன்பம்
சிந்தியதில்லை கண்ணீர்
அத்தனை சுமையை நீ சுமது
இன்பம் மட்டும் காட்டினாய் ..!!

என் தலைவாரி
பூச்சூடி,பொட்டிட்டு
என் கண்ணுக்கு மையிட்டு
உன் கண்ணுக்குள் என்னையிட்டு
இமையாய் காத்து
என் உயிரின் பூவாய் பூத்து
குலுங்கிய அந்த வசந்த காலங்கள்
கோடிகள் கொட்டினாலும்
மீண்டும் கிட்டுமோ..???

இறைவனும் கொண்டான் ஆசை
அவளை தன்வசம் கொண்டவனை
எச எனக்கும் இல்லை ஒரு பாஷை ..!!
பாவம் அவனும் கண்டதில்லையோ
இத்தனை ஒரு பாசம்
என் உயிரை என்னில்
பிரித்து அவனும் போடுகிறான் ஏனோ வேஷம் ..!!

அந்த ஒரு நாள்
என் கண் முன்னே
என் உயிரை துளைத்து
நின்றேன் அனாதையாய்,
ஆனேன் நடை பிணமாய்,
அழுது தீர்த்தது கண்கள்
சிந்த கண்ணீரும் இல்லை
துடைக்க கைகளும் இல்லை
வீதியில் தாயை பிரிந்த குழந்தையாய்
விம்பி நின்றேன் !!! ,

என்றுமே எந்தன் ஜெயம் நீ
உன்னை பிரிந்து வாடும்
வெறும் பிணம் நான்
அதை அறிவாயா நீ !!!

தனிமையே துணையாய்
கண்ணீரே என் கதையாய்
துயரமே எனது அறையாய்
மணித்துளிகளும் ஓவொன்றும் நரகமாய்
என் பாதை செல்கிறது கேள்விக்குறியாய்
எனது உயிரைத் தேடி ..!!?

முடித்துக்கொள்ள தெரியாமல்
முழிக்கிறேன்
கவிதையை அல்ல
என் வாழ்க்கையை

என்றும்..என்றென்றும்..!!

எழுதியவர் : JEEVAN... (24-Jan-12, 8:27 pm)
பார்வை : 565

மேலே