காத்திரு நண்பா!

கலகம் செய்வோர்
கழகம் சேர முனைவதுண்டு
கலைந்து செல்லும்வரை
காத்திரு நண்பா!

இருட்டில் தவறு செய்வோர்
விடிந்தால் மறைந்து போவர்
வெளிச்சம் வரும்வரை
காத்திரு நண்பா!

தான் யாரென்று தனக்கே தெரியாமல்
நீ யாரென்று உனக்குரைப்பார் மூடர் பலர்.
அவர்களுக்கான நிமிடங்கள் முடியும்வரை
காத்திரு நண்பா!

தவமும் தனமும் இருவேறல்ல
முயற்சி முட்டி உடையாத கல்லில்ல
விடாமுயற்சி கூட ஒரு வகைல தவந்தான்
காத்திரு நண்பா!

காதல் மாண்டால் கரை சேர்க்க வேணும்
கல்லு நெஞ்சு; அது நெருப்போடு சேராத பஞ்சு!
உனக்கும் எனக்கும் உதவுது ஒன்னே ஒன்னு!
காத்திரு நண்பா!

நண்பன் வரும்வரை...

எழுதியவர் : அக்னிபுத்ரன் (25-Jan-12, 4:07 am)
பார்வை : 403

மேலே