நண்பன்
மதி கெட்டு தாறுமாறாகச்
சுற்றித் திரிந்த என்னை
உன் நட்பு எனும் பாசக்
கயிற்றால் கட்டி விட்டாய்...
நேற்று வரை நான் கல்லாக இருந்தேன்
உன் விரல் படும் வரையில்...
பிதிதாகப் பிறந்ததுப் போல உணர்கிறேன்
உன் நட்பு பிறந்தத் தருணத்திலிருந்து
உனது பெயரைக் கெட்டப் போதுதான்
நான் எனதுப் பெயரஎக் உணர்ந்தேன்....
நீ ஏன் தோளில் சய்ந்தத் தருணத்தில்
இமயம் ஏன் காலடியில் சரிந்தது....
கடவுள் என் முன் தோன்றி உனக்கு
நட்பு வேண்டுமா? அமிர்தம் வேண்டுமா? என்றார்
எதுவும் விளங்கவில்லை எனக்கு
உடனே, அமிர்தம் பெற்றால் நீண்ட காலம் வாழலாம்....
நட்பெய்ப் பெற்றால் குறுகியக் காலம்
மட்டுமே வழ முடியும் என்றார்....
புன்னகைத்துக் கொண்டேக் கூறினேன்
நட்பு இல்லாமல் பல ஆண்டுகள் வாழ்வதை விட
என் நண்பனுடன் ஒரு நான் வாழ்ந்தால்
போதும் என்றேன்...
அக்கணமேக் கடவுள் இறந்தார்
மறுக்கணமே பிறந்தார்
எனது நண்பனாக....
இவ்வுலகில் மிகப் பெரும் வறுமை நிலையில் இருப்பவன்
பெயர், புகழ், பதவி, பணம் இல்லாதவன் அல்ல
நண்பர்கள் இல்லாதவன் தான்
எனது நட்பு பலாக் கனியைப் போன்றது
மேலோட்டமாகப் பார்த்து முடிவெடுக்காதீர் ...
முட்களை அகற்றி விட்டு
சுளையை சுவைத்துப் பாருங்கள்
எனது நட்பின் சுவைத் தெரியும்...
துன்பம் கூட சுகம்தான் எனக்கு
என்னவன் அதத் துடைப்பவனாக இருந்தால்...
இன்பம் கூட சுமையாக மாறும் எனக்கு
என்னவன் என்னுடன் இல்லையென்றால்...
மற்றவைகளை நேசிப்போம்
நட்பை மட்டுமே சுவாசிப்போம்
நமது வாழ்வு நம்மிடமே வசப்படட்டும்.