என் அன்னை

சுழன்று கிடந்தாய் இருண்ட சொர்க்கத்தில்..

மிதந்து திரிந்தாய் அன்னை இரத்தத்தில்....

மாதம் கடந்தபின் மயங்கும் பொன்மேனி....
தன் வலியை பொறுத்து அமைதி இழந்து இறக்கி வைத்தால் இந்த வெளிச்ச உலகில் உன் பாதம்.......

நீ அழைக்கும் ஒரு வார்த்தை அன்னை என்றாக
வேண்டித்தவிப்பால் உன் சிவந்த இதழோடு.........

நீ நடக்கும் தருவாய்க்கு தவழும் நாள்கூட மனதில் பதிப்பாலே பின் என்னி மகிழ்வாளே.......

எண்ணற்ற நோய் தாக்கும் ஒரு மருந்து உனை காக்கும் உன் அன்னை மார்போடு...

ஆண்டு பல கடக்கும் துளி அன்பும் குறையாது தாய் பிள்ளை உறவோடு.........

நீ இறக்கும் தருணத்தில் அன்னை என கூறு இந்த அகிலம் உனை போற்றும் வரலாறும் பாராட்டும்.........

எழுதியவர் : anbu thameem (1-Feb-12, 4:00 pm)
Tanglish : en annai
பார்வை : 309

மேலே