காதலின் உயிர் வலி

வாசல் கதவு
ஜன்னல் கதவு
அனைத்தையும் ,
சாத்தி விட்டு தான்
படுத்தேன் .

அப்படி இருந்தும்
உள்ளே புகுந்து
உதைகின்றன
உந்தன்
ஞாபகங்கள்.....

நான்
ஒழுங்காகத்தான்
இருந்தேன் ,
உன்னை
பார்க்கும் வரை .....

நீ தான்
அதிகம்
செல்லம்
கொடுத்து
கெடுத்துவிட்டாய் .

குழந்தையின்
கையில் கிடைத்த
பொம்மை போன்று,
என் காதல்
உன் கையில் கிடைத்திருக்கிறது .

உருட்டி,
உருட்டி..,
விளையாடு
உடைத்து
விடாதே ?

வாழ்க்கை
பயணத்தில்
இருவரும்
வெவ்வேறு திசைகளில்
செல்கையில் இறுதியாக ,

நம்
காதல் கடிதங்களை
எரித்து முடித்தேன்

எரிந்தன கடிதங்கள் ........
சாம்பலாய் நான் ........

எழுதியவர் : சன் சம்சுதீன் (5-Feb-12, 2:55 pm)
Tanglish : kathalin uyir vali
பார்வை : 414

மேலே