நான் தொலைந்து போனேன்....
வெளியில் தான் முகம் காட்டாமல் இருப்பாய் என்று நினைத்தேன்...
ஆனால் என்னிடமும் முகம் காட்டவில்லை!!!
முகம் காட்டாத நீ,
எனக்கு கிடைத்த இடம் முகம் காட்டும் புத்தகத்தில் தான்...
உன்குரலைதான் எனக்கு நட்பாக கொடுத்தாய்...
உன்குரலில் ஒலித்த சின்ன சின்ன வார்த்தைகளில் குழந்தையாய் தெரிந்தாய்...
இன்று என்னை தூக்கி எறிந்தாய்!!!
நீ மௌனம் காத்தாய்!!!
எனக்கு தோல்விகளும் , உறவுகள் பிரிதலும் பழகிவிட்டது என்றாலும்,
என் மனம் இதை ஒப்பு கொள்ள மறுக்கிறது.
உன்னவரிடம் நீ சென்று சேரும் வரை உன் குரல் கேட்பேன் என்று நம்பிக்கை இருந்தது ,
இன்று நீ மௌனம் காத்தாய்
ஆனாலும் சந்தோசம்!
உன்னவர் கரம் பிடித்து நடப்பது போல் எனக்கு தோன்றுகிறது...
இனி நான் அடுத்த நட்பு தேடலை தொடர போவதில்லை !!!
இனி என் மனதிற்கு அடுத்த பிரிவினை தாங்கும் சக்தி இருக்கும் என்ற போதிலும் ,
ஏனோ அதை நான் விரும்ப வில்லை...
இன்று என் மனம் நொறுங்கி,என் கண்ணீர் சிதறல்களில் நான் தொலைந்தே விட்டேன்...
மறுபடியும் நான் கிடைப்பேன் என்று, எனக்கு நானே நம்பிக்கை கொடுத்து
தொலைத்த என்னை நான் தேட தொடங்குகிறேன்......
என் எதிரிக்கும் கூட இந்த வலி வேண்டாம்...