சூரியன் பேசினால்

நான் சுட்டெரித்தேனா யார் சொன்னது ?
நீ சுற்றுபுறத்தை கெடுத்தாயே
நான் வெப்பத்தை உமிழ்ந்தேனா யார் சொன்னது?
நீ கண்டதையும் எரித்தாயே
நான் நீண்ட நேரம் கொதித்தேனா யார் சொன்னது?
நீ இயற்கையை வெறுத்தாயே
நான் பார்வையால் தகித்தேனா யார் சொன்னது?
நீ நீர்பரப்பெல்லாம் நிறைத்தாயே
நான் காட்டுத்தீயை வளர்த்தேனா யார் சொன்னது?
நீ காடெல்லாம் அழித்தாயே
நான் தொல்லை அளித்தேனா யார் சொன்னது?
நீ புகையால் நிரப்பினாயே
இருப்பது ஒரு பூமி ஒரு சூரியன்
இனி வரும் தலைமுறையும் வாழட்டுமே
மாற்றத்தை உருவாக்குவோம்
நம்பிக்கையாய் வாழ்வோம்.