கண்டு கொண்டேன்


கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!

காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!

இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!

ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!

எழுதியவர் : (4-Sep-10, 7:04 pm)
சேர்த்தது : கீத்ஸ்
Tanglish : kandu konden
பார்வை : 304

மேலே