!!இயற்கையெல்லாம் இன்று செயற்கையடா !!!

சாறாககிய சட்டியெங்கே ?
சோறாக்கிய சிறு பானையெங்கே ?

அன்னம் கிண்டும் அகப்பையெங்கே ?
மாதர் அரிசி குத்தும் உலக்கையெங்கே ?

மாவாட்டும் உரலெங்கே ?
மஞ்சளரைக்கும் அம்மியெங்கே ?

மரமெல்லா மெங்கே ?
மாதம் மும்மாரி மழையெங்கே ?

வானம் பொழியவில்லை
பூமி விளையவில்லை

விளைநிலங்க லெங்கே ?
வீட்டு மனைகளா கங்கே .

இப்படி இந்திய விவசாயமும்
இடுப்பொடிந்த நிலையின்று

இயற்கையெல்லாம் அழியுதடா
செயற்கையெல்லாம் வாழுதடா ..

வேண்டும் பொருளாதார முன்னேற்றம்
வேண்டாம் இயற்கையில் மாற்றம்......

எழுதியவர் : பிரியாராம் (12-Mar-12, 3:07 pm)
பார்வை : 326

மேலே