பெண்ணே நீ செய்த பாவமென்ன ?
இரக்கமென்ற வார்த்தைக்கு
சொந்தமானவள் அன்னையே இவ்வுலகில்
அன்னை பாசத்தை மிஞ்சிய பாசம்
இவ்வையகத்தில் இல்லையடி
காதலில் சுகம் கண்டு
கள்ளத்தன உறவு கொண்டவளோ
சிறு ஈர நெஞ்சம் கொண்டு
குப்பை தொட்டியிலாவது வீசுவாள் -உன்னை
அறிந்தோர் சிலர் அனாதை
இல்லதிலாவது சேர்ப்பாரென எண்ணி.
பத்து மாதம் உன்னை சுமந்து
பெற்றெடுத்த உன்னன்னையே
நீ பெண்ணென தெரிந்ததும்
கள்ளிபாலை கண்டு
கொண்டு வந்து கொன்று
குழந்தை உனக்கு கொள்ளி வைக்கிறாளே!
பெண்ணே !
நீ செய்த பாவம்தான் என்ன ?
குழந்தை இல்லையென
கோடிதவம் புரிகின்றனர்
அவர்களுக்கு நீ இருந்திருந்தால்
அன்புக்கு அரசியாய் இருந்திருப்பாய்
பெண்ணே!
நீ செய்த பாவம்தான் என்ன ?
ஒருநாள் வாழும் மலர்கள்கூட
பிறந்த பயனை அடைந்துவிட்டு இறக்கின்றன
ஆனால் பிஞ்சு நீயோ பிறந்த
கணமே இறக்கின்றாயே !
பெண்ணே!
நீ செய்த பாவம்தான் என்ன ?
பென்சிசுகொலைக்கு கடுந்தண்டனை
என அரசாங்கம் அறிவித்தும்
பிஞ்சு உனக்கு எருக்கம்பாலை
கொடுக்கிறாளே உன் அன்னை
அவளும் பெண்தான் என்பதை
எப்படி மறந்தாளோ?
பெண்ணே !
நீ செய்த பாவம்தான் என்ன ?
தாய்பால் குடித்து வளரவேண்டிய-நீ
கள்ளிப்பால் குடித்து இறக்கிறாயே!
பெண்ணே !
நீ செய்த பாவம்தான் என்ன ?
பிஞ்சுகளை கொல்லவேண்டாமென
அரசாங்கம் அறிவிக்கிறது
அன்பே உருவான உன் அன்னைக்கிது
தெரியவில்லையே என மனம் பதறுகிறது
தற்போது அதிகமில்லை உன்னழிவு
என்றாலும் ஓரிரண்டு இருக்கிறதே !
என வெம்புதே என்மனது ......