நிலா...

கனத்த இரவில் விழித்து பார்க்கையில்
நீல காகிதத்தில் வெண் மை பொட்டு...
இதோ கதிரவனுக்கும் வெட்கம்
அவளிருக்கும் இரவு
தலை சாயும்
அவள் மறை கண்டு
வேட்கை தெளிக்கும...
அப்பழுக்கற்ற அழகே
நீ சொல் ஓருண்மை ,,,,
உன்னிரவு தரிசனம் யாருக்காக ?
உனை சின்னமாய் கொண்டு
உருகும் காதலுக்கா ?
உவமைக்கு உருவகம் தேடும்
காதலின் கவிஞனுக்கா ?
தனிமையின் சாட்சியே
தலைவனின் கலவுக்கு
நீ காவலா ....
உவமையின் உச்சமே
தேனை தேடா வண்டும்
உனை பாடா பண்ணும்
உலகில் யாதோ
கவி கனவே
நீயும் அவளும் ஒன்றுதான்
கலங்க வைத்து கவிபாட வைத்து
காணாமல் போவதால் ....

பகலில் மறையும் மானே
காத்திருப்பேன்
உன் பகல்'அவனை' காண .....

$வினோ....

எழுதியவர் : வினோ.... (24-Mar-12, 3:14 pm)
Tanglish : nila
பார்வை : 227

மேலே