என் கவிதை நீ தானே

எனக்கு கவிதை மிகவும்
பிடிக்கும் என்று நீ சொன்னதால் ..............

நான் கவிதை எழுத ஆசைப்பட்டேன்

என் கவிதைகளை பாராட்ட
வார்த்தை இல்லை என்று
நீ சொன்னாய் ..............

இப்போது எனக்கு கவிதை
எழுத வார்த்தை வரவில்லை

வார்த்தைகள் எல்லாம் உன் வீட்டு
வாசலில் வரிசையாய் நிற்கிறது
நீயும் கவிதை எழுதுவதால் ...............

கவிதையிடம் நான் தோற்று போகிறேன்

என் கவிதை நீ தானே..................

எழுதியவர் : கவிஞர் :ஜெ .மகேஷ் (29-Mar-12, 1:01 pm)
சேர்த்தது : jgmagesh
பார்வை : 236

மேலே