யோசித்துப் பார்
என்
கைப்
பிடித்து,
நீ
சாலை
கடக்க..
என்னை
கடத்தியது
யார்?
உனக்கு
உறக்கமென
என்
தோளில்
சாய..
என்
ஒவ்வொரு
தூக்கத்தையும்
சாய்த்தது
யார்?
நான்
கை
அழுக்கென
சொல்லி
நீ
ஊட்டிவிட..
என்
ஒட்டுமொத்த
பசியை
உதறிவிட்டது
யார்?
இப்படி
கொஞ்சம்
சாய்த்து,
உதறி,
கடத்தி..,
என்னை
உயிருள்ள
பிணமாக
கிடத்தியது
யார்?
கொஞ்சம்
யோசித்துப்
பார்..!