மனிதன் ஒரு மெழுகுவர்த்தி...

எரிய எரிய
மெழுகு உருகுவதுபோல்
வயது ஏற ஏற
மனிதன் ஆயுள் குறைகிறது...

அடுத்தவருக்கு வெளிச்சம் கொடுத்து
மெழுகு உருகுகிறது
அடுத்தவருக்காக வாழ்ந்து வாழ்ந்து
மனிதன் உருகுகிறான்...

உடலை விட்டு உயிர் பிரிவது போல
மெழுகை விட்டு திரி பிரிகிறது
கடைசியில் உடலும் மெழுகும் மட்டும் எஞ்சும்..

எழுதியவர் : ஆயிஷா பாரூக் (16-Apr-12, 9:07 pm)
பார்வை : 347

மேலே