எங்கே தொலைத்தேன்...
பள்ளியில்...
பக்கத்திருந்த சிறுவன் சொன்ன கவிதைகளை
சொல்லி சொல்லி சிலாகித்திருந்த நாட்கள்
மனதை வருடிச் சென்றது...
இப்போது வைரமுத்துவின் வரிகளை
பார்த்தும் கூட ஆர்வமற்ற புன்னகை உதிர்த்து
பணியில் மூழ்கிப்போன போது..
பணத்திற்கு ரசனைகளை அடகு வைத்த ரசிகனாய்!!!!