இது கதையல்ல காதல் ----- என்னுரை.......

எழுத்துலக தோழர் தோழியர்களுக்கு வணக்கங்கள்......

************************புதியவனுக்கு தாங்கள் அளிக்கும் வரவேற்ப்பு கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இந்த இனிய தருணத்தில் தங்களிடம் மற்றொரு இனிய செய்தியையும் தெரிவிக்க விரும்புகிறேன்.


************************ஒரு அழகிய காதல் காவியம் படைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் எண்ணம். அதை பூர்த்தி செய்ய இது வரை சந்தர்ப்பம் வாய்க்காமல் இருந்து வந்தது. ஆனால் அதற்க்கு இந்த எழுத்து இணையதளம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. எனவே எனது படைப்பை தொடங்கலாம் என்று எண்ணுகிறேன்.

************************எனது படைப்பிற்க்கு நான் வைத்திருக்கும் தலைப்பு............"இது கதையல்ல காதல்!!!".

************************கவிஞர் திரு.வைரமுத்து அவர்களின் சிறந்த ரசிகன் நான். அவர் எழுதிய "தண்ணீர்தேசம்" பலமுறை வாசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கும் இதுபோன்று ஒரு காதல் காவியம் படைக்க வேண்டுமென்ற ஆசை ஏற்படும். அதன் உந்துதல்தான் இந்த சிறு முயற்சி. இதனை பகுதி பகுதியாக வெளியிடலாம் என்று முடிவு செய்துள்ளேன். எனவே தங்கள் ஆதரவையும், மேலான கருத்துக்களையும் வாரி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்....


************************நிறை இருந்தால் வாழ்த்துங்கள்.....குறை இருந்தால் சொல்லி திருத்துங்கள்........

நன்றி.
தமிழ்மகன்

எழுதியவர் : தமிழ்மகன் (5-May-12, 2:21 am)
சேர்த்தது : தமிழ்மகன்
பார்வை : 260

மேலே