எனக்காக கண்ணீர் சிந்தாதே நீ 555

அன்பே.....
நீயும் நானும் உயிராக நேசித்தோம்...
சந்தர்ப்ப சூழ்நிலையில் உனக்கு
திருமணம் நிச்சயமாக
போகிறது என்கிறாய்...
நான் உணர்கிறேன்...
நீ எனக்கு துரோகம் செய்ததாக
நினைக்காதே என்னுயிரே...
நான் உனக்கு துரோகம்
செய்ததாக நினைத்துகொள்...
என் உயிரே நீ செல்லும் வீட்டில்...
நல்ல மருமகளாகவும்...
உன் கணவருக்கு அன்பான
மனைவியாகவும்...
உன் மழலைகளுக்கு
பாசமுள்ள தாயாகவும்...
நீ இருக்க வேண்டும்
இது என் ஆசை...
எனக்கு நீ துரோகம் செய்ததாக
நினைத்து நீ வருந்தாதே...
உன் வாழ்க்கையில் சோகம்
சந்தோசங்களை...
பகிர்ந்துகொள்ள நான் இருக்கிறேன்...
நீ விரும்பினால்...
முடிந்தால் உன் திருமணத்திற்கு
நான் வருகிறேன்...
காதலனாக அல்ல...
நல்ல நண்பனாக...
எனக்க நீ ஒருபோதும் கண்ணீர் சிந்தாதே...
என் உள்ளம் தாங்காது...உயிரே.....