அழியாத ஓவியங்கள்

கலைகளிலே சிறந்தவள் நீ
ஓவியனின்
கைவண்ணத்திலே!

உன்னை
சிறப்பு மிக்கவர்கள்
ஏராளமான கோவில்களில்
சித்தரித்து உள்ளார்கள்.

நீ முன்னொரு காலத்தில்
வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்து
தப்பித்து வளர்ந்தாய்.!

உன்னை அழித்து விட்டால் ...

இன்று ....
உன் அழகைக் கண்டு ரசிக்காமல்
போயிருப்போமே.!

இறைவனின் ஆன்மீகமும்
தல புராணங்களும்,
அவனின் திருவிளையாடல்களும்
நாங்கள் காணாமல் போயிருப்போமே..!

நீ இன்றும் அழகியலாக ஒவ்வொரு
கோவில்களிலும் ஒளிர்கின்றாயே !

உலக அதிசயங்களில் அதிசயமான
தாஜ் மகாலில் உள்ள
அழகிய
ஓவியங்களும் நாம் காண
கண்கள்
இரண்டும் போதாது..

நீ என்றும் வாழவேண்டும்
அழியாமல் !!

எழுதியவர் : செயா ரெத்தினம் (13-May-12, 4:50 pm)
பார்வை : 186

மேலே